*தலைமுறை*
~~~~~~~~~~~~~
எத்தனை தலைமுறை வேண்டுமானாலும் வறுமையில் கஷ்டப்படலாம். ஆனால் ஒரு தலைமுறை மேலே வந்துவிட்டால் அதன்பின் தன் வாரிசுகள் யாரும் வறுமைக்கு போகாமல் இருக்கும்படி குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும். அதற்கு தன்னை தாண்டி, தன் பிள்ளைகளை தாண்டி, தன் வம்சத்தை பற்றி சிந்திக்கவேண்டும். அதற்கு ஏற்ற முதலீடுகளையும், கல்வியையும், மதிப்பீடுகளையும் தன் வம்சாவழியினர்க்கு கற்றுக்கொடுக்கவேண்டும்.
தன் சுயநலனை மட்டுமே முன்னிறுத்தி சிந்திக்கும் போக்கு இப்ப வளர்ந்துகொண்டு வருகிறது. தன்னை தாண்டி, தன் பிள்ளைகளை தாண்டி, தன் வம்சத்தை பற்றி சிந்திக்கவேண்டும். யாரும் தனியாக பூமிக்கு வ்ரவில்லை. ஒரு நீண்ட, நெடிய பரம்பரையின் சங்கிலித்தொடர் தான் நாம். அதன் ஒரு இணைப்புதான் நாம். அதை வலுவாக்கி, மேலும் வலுவாக்குவது எப்படின்னு சந்ததியினர்க்கு கற்றுக்கொடுக்கவேண்டும்.
அப்படி செய்த முன்னோர்களின் பெயரால் அந்த வம்சம் அதன்பின் அழைக்படும்.பல நூற்றான்டுகள் கழித்து வரும் பேரப்பிள்ளைகள் அவனது பெயரை சொல்லிக்கொண்டு, அவன் போல வாழவேண்டும் என தன்னை செம்மைப்படுத்திக்கொள்வார்கள்.
நாம எத்தனை வேண்டுமானாலும் கஷ்டப்படலாம். ஆனால் நமக்கு பின் நம் பரம்பரை செழிக்கவேண்டும்.அவர்களால் நாட்டுக்கும் பலன் கிடைக்கவேண்டும்