![](https://assets13.geni.com/images/external/twitter_bird_small.gif?1670521228)
![](https://assets11.geni.com/images/facebook_white_small_short.gif?1670521228)
/
மரண அறிவித்தல் OBITUARY Late Mrs.Thilagavathi Manikkavasagar,
மரண அறிவித்தல் OBITUARY Late Mrs.Thilagavathi Manikkavasagar, daughter of Hindu Port Rajaratnam passed away peacefully on 9/th of Decemer 2022 in கந்தரோடை Kandarodai, Kadurugoda, Jaffna, NP, Sri Lanka,
She was Daughter of Late Mr. Rajaratnam (Hindu Board) Subramaniam and Late Mrs.Sellama Rajaratnam,
Daughter -in-law of Late Mr. Visuvanathan and Late Mrs,Marimuthuppillai Visuvanathan.
She was Wife of Late Late Mr. Manickavasagar Visuvanathan,
She was Mother of Mr.Visuvanathamyuran Manickavasagar
She was sister of Kathiresu; Mangaiarkarasi Kumarasamy; Kanagambigai Rajaratnam; Yogambigai Maheswaran; Satkunananthan Rajaratnam; and Saravanabavanathan Rajaratnam
She was Sister -in-law of Mangainayaki Kathiresu,Kumarasamy,Maheswaran, Ratha Satkunananthan, Rukmany Saravanabavananthan, Vaithiyanathan(Kulzhnthai Vathiyar) வைத்தியநாதன்(முன்னாள் ஆசிரியர் பதில் அதிபர் இரத்மலானை இந்துக் கல்லூரி) Visuvanathan and Thaivanayaki Vaithiyanathan
The Funeral arrangements அன்னாரின் இறுதிக்கிரியைகள் (11./12/.2022) முற்பகல்11 00 மணிக்கு ஆரம்பமாகி அதனைத்தொடர்ந்து கந்தரோடை சங்சங்கம் புலவு மயானத்தில்
தொடர்புகளுக்கு +94778177491
/
யாழில் இந்துபோர்ட் இராசரத்தினத்தின் பிறந்தநாள் விழா: மாணவர்களுக்கு கெளரவம் (Video)
TamilTwin
By
TamilTwin
4th July 2019
0
311
Share
யாழ்ப்பாணம் திருநெல்வேலி சைவவித்தியா விருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் பெரியார் இந்துபோர்ட் சு.இராசரத்தினத்தின் 135 ஆவது பிறந்தநாள் விழாவும், பரிசளிப்பு நிகழ்வும் இன்று வியாழக்கிழமை(04) பிற்பகல்-03.15 மணி முதல் சங்க ஆராதனை மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
இந்த விழாவில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
சைவவித்தியா விருத்திச் சங்கத் தலைவரும், ஈழத்தின் பிரபல கவிஞருமான சோ. பத்மநாதன் தலைமையில் இடம்பெற்ற விழாவில் பெரியார் சு.இராசரத்தினத்தின் உருவச் சிலைக்குப் பிரதமவிருந்தினர் உள்ளிட்டோரால் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் ‘இல்லக விளக்கு’ எனும் மலர் வெளியீடு செய்து வைக்கப்பட்டது. விருந்தினர் உரையைத் தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்வுகள் ஆரம்பமானது.
இதன்போது கல்வியிலும், இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் தமது திறமைகளை வெளிப்படுத்தி சாதித்த திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் கீழ் இயங்கும் சைவச் சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பரிசில் மற்றும் கேடயங்கள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர். குறிப்பாக சைவச் சிறுவர் இல்லத்தில் கல்வி கற்றுப் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவான பல மாணவ, மாணவியர் சிறப்புப் பரிசில்கள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர்.
மேற்படி விழாவில் விருந்தினருடன் இந்துபோர்ட் இராசரத்தினத்தின் பேர்த்தியார் திருமதி- திலகவதி மாணிக்கவாசகர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஓய்வுநிலை தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் சி. சிவலிங்கராஜா, பேராசிரியை கலைவாணி இராமநாதன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துநாகரீகத் துறை விரிவுரையாளர் தி.செல்வமனோகரன் மற்றும் பல்வேறு துறைசார்ந்தவர்கள், சைவச் சிறுவர் இல்ல மாணவர்கள், ஆசிரியர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொணடனர்.